×

மாங்காட்டில் பரபரப்பு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய கஞ்சா கும்பல்: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

குன்றத்தூர்: மாங்காடு, ரகுநாதபுரம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அதே பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, வடமாநில தொழிலாளர்கள் 2 பேர், தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே செல்போனில் பேசிய கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், அவர்களின் செல்போன்களை பறித்துள்ளனர். உடனே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபர்களை மடக்கிப் பிடித்து, செல்போனை மீண்டும் வடமாநில வாலிபர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் மிகவும்  ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், மீண்டும் இரவு அதிக அளவு கஞ்சா போதையில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது அந்த  மர்ம நபர்கள் தங்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் வடமாநில வாலிபர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில், பொதுமக்கள், வடமாநில வாலிபர்கள் என நான்கு பேருக்கு தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து, மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடனே விரைந்து சென்ற போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கஞ்சா கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே மாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags : Mangat , Cannabis gang slashes teenagers in Mangat: Police crack down on mysterious individuals
× RELATED சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு...