சென்னை: முல்லைப் பெரியாறில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடையாக இருந்த மரங்களை அகற்ற கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.