×

மசினகுடி பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்ட T23 புலியின் புதிய வீடியோ வெளியீடு.!

மசினகுடி: மசினகுடி பகுதியில் உயிருடன்  பிடிக்கப்பட்ட T23 புலியின் புதிய வீடியோவை மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 4 மனிதர்களையும்,  30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற டி23 புலி கடந்த மாதம் 15ஆம் தேதி உயிருடன் மசினகுடி வனப்பகுதியில்  பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் பிடிக்கப்பட்ட இந்த புலியின் உடலில் பல காயங்கள்  ஏற்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் புலிக்கு மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புலிக்கு தொடர் சிகிச்சையால் முன்னங்கால் வீக்கம் குறைந்து வருவதாகவும், இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகரித்து வருவதாக  வனகால்நடை மருத்துவர்கள்  தெரிவித்துள்ள நிலையில் தற்போது T23 புலி  ஆரோக்கியமாக உள்ளதாக ஒரு புதிய வீடியோவை பூங்கா நிர்வாகப் வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோவில் புலி நல்ல முறையில் நடமாடி ஓவெடுக்க கூண்டிற்க்குள் கம்பீரமாக நடந்து வந்து வைக்கோல் மெத்தையில் படுக்கும் காட்சியை வெளிட்டுள்ளது. தற்போது புலி நல்ல நிலையில் உள்ளதாகவும் அதற்கு தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கி வருவதாகவும் மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Masinudi , New video of T23 tiger captured alive in Machinagudi released!
× RELATED மசினகுடி புலி இருக்குமிடம் தெரிந்தது;...