×

தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டியில் 5 ஆயிரம் பேர் குவிந்தனர்

ஊட்டி: தொடர் விடுமுறையால் ஊட்டியில் நேற்று 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர். தீபாவளி தினத்தன்று ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 9 ஆயிரத்து 800 பேர் வந்து சென்றுள்ளனர். நேற்றைய தினம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். வரும் ஞாயிற்றுகிழமை வரை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Echo of the series holiday; 5 thousand people gathered in Ooty
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...