டெல்லி: நவம்பர் 14ம் தேதி தென்மண்டல குழு கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கவுள்ளது. ஆந்திரா திருப்பதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க தென்னிந்திய மாநில முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே சுமூக உறவை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள ஆலோசனை நடக்கவுள்ளது.