×

வாகனம் மோதி ஆட்டோ நொறுங்கியது ஆந்திராவில் பெண் தொழிலாளர்கள் 6 பேர் பலி-மற்றொரு இடத்தில் கார் மோதி 2 பேர் சாவு

திருமலை : ஆந்திராவில் ஆட்டோ மீது வாகனம் மோதி பெண் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றொரு இடத்தில் கார் மோதி சாலையில் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கொப்பலகொண்டா கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 10 பேர் நேற்று காலை ஒரு ஆட்டோவில் பொத்தவடுகூரில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றனர். சாமிதி கிராமம் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது அதிகாலை 5.30 மணியளவில் எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கி 6 பெண் தொழிலாளர்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதிமக்கள் மீட்டு அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த அனந்தபூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.அதேபோல், இந்த விபத்து நடந்த 1 கி.மீட்டர் தூரத்தில் எடுரூர் கிராமத்தை சேர்ந்த யாகூப், நாராயணசாமி ஆகியோர் சாலையோரமாக நடந்து சென்றனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனந்தபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Anthra , Thirumalai: Six female workers were killed when their vehicle collided with an auto in Andhra Pradesh. Elsewhere, two people were killed when a car collided head-on with a truck.
× RELATED ஆந்திராவுக்கு 2 லாரிகளில் கடத்தப்பட்ட...