×

பொதுப்பணி, நீர்வளத்துறையில் தலைமைப் பொறியாளர்கள் 3 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் 3 தலைமை பொறியாளர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப்சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:   நீர்வளத்துறை கோவை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் நீர் ஆய்வு நிறுவன தலைமை பொறியாளராகவும், நீர் ஆய்வு நிறுவன தலைமை பொறியாளர் தட்சணாமூர்த்தி தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வினியோக கழக தலைமை பொறியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி கோவை மண்டல தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil , Transfer of 3 Chief Engineers in Public Works and Water Resources: Government of Tamil Nadu Order
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு