சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தைப் பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதியில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியாதவது: 30 ஆண்டு சராசரி கணக்கீட்டு படி நவ.30ம் தேதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என தெரிவித்துள்ளார்.