கர்நாடகா: கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு இன்று 6,300 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,800 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டுள்ளது.