×

நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் மேம்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் மேம்பாடு பணிகள் தொடர்பாக மாண்புமிகு சுற்றுசூழல், கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு  மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுகாதார கழிப்பிடங்கள் மற்றும் நடைப்பயிற்சி பகுதிகளை மாண்புமிகு சுற்றுசூழல், கால நிலை மாற்றத் துறை மற்றும்  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் அவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதிகளை பராமரித்திடவும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் காலங்களில் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளை சிறந்த முறையில் பராமரித்திடவும் அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் அவர்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்காக உரிய மின்விளக்கு வசதிகளை மேம்படுத்திடவும்,

நடைப்பயிற்சி பாதையினை மேம்படுத்திடவும் கேட்டுக்கொண்டதை அடுத்து கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அங்குள்ள இரண்டு உடற்பயிற்சி கூடங்களை பார்வையிட்ட மாண்புமிகு சுற்றுசூழல், கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது ஆயிரம் விளக்கு  சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மேலாளர் திரு. சாமுவேல் ராஜா டேனியல் மண்டல முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா முதுநிலை மேலாளர் ராமசுப்ரமணிய ராஜா அவர்கள் உடன் இருந்தனர்.

Tags : Minister ,Meyyanathan ,Nungambakkam Tennis Stadium , நுங்கம்பாக்கம்
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...