நெல்லை: ரூ.14 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர், நெல்லை டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஷர்மிளா மூலம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.