×

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 16ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

16ம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  சித்திரை ஆட்ட திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். இந்த பூஜையில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Sabarimaya Iaipan , சபரிமலை ஐயப்பன்
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை...