×

சேலத்தில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு கொடி என ஒரு கொடியை ஏற்றிய சீமான் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 5 பெண்கள் உள்பட 300 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கான கொடி எனக் கூறி சீமான் ஒரு கொடியை ஏற்றி வைத்தார். இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்தார். தமிழ்நாடு கொடி என சீமான் ஒரு கொடியை ஏற்றியது தமிழக மக்களிடையே மொழி வாரி பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காதது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 6 பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Seaman ,Salem , Case in 6 sections against Seaman in Salem
× RELATED சொல்லிட்டாங்க…