×

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை : திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபி கடல் பகுதிக்கு நகரக் கூடும்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திர வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மற்றும் நாளை திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்  இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் ,கடலூர் ,வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை ,ராமநாதபுர,ம் திருநெல்வேலி ,தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள்  செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,கடலூர், காஞ்சிபுரம் ,சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில பகுதிகளில்  மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

இன்று குமரி கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.   நாளை மற்றும் நாளை மறுநாள் கேரளா கடலோரப் பகுதிகள் , லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.5 மற்றும் 6ம் தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள்,  கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்  மேற்கூறிய தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Orange Alert Meteorological Center , வானிலை ஆய்வு மையம்
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...