திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் (98) திருவனந்தபுரத்தில் தன்னுடைய மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்பில், அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.