கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி நதி அணையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய பாசனப் பரப்பு 5860 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப் பரப்பு 5000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 10860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 02.11.2021 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது என பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.