சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாராட்டால் வார்த்தைகளின்றி நெகிழ்ந்து மகிழ்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்தார். முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என கூறினார். ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என நடிகர் சூர்யா என கூறினார்.