சேலம்: மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனி உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் மணி தேடப்பட்டு வருகிறார்.