புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: புதுவையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.