சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விளவங்கோடு, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுகாவும், செங்கோட்டையில் பாதி தாலுகாவும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த பொன்னான நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு காரணமாக இருந்த மார்ஷல் நேசமணியின் தியாகத்தையும், உழைப்பையும் நினைவு கூர்வோம்.