×

ரூ.201 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலம் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்ரூ.210 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம்,ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம்,ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இப்பணிளுக்கு நிதி ஒதுக்கீடு, டெண்டர் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், கடந்த 2015ல் தான் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளை 2018 ஜூன் 28ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.ஆனால், இந்த பாலத்துக்கு சர்வீஸ், சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அதிமுக ஆட்சி முடிந்த பிறகும் பாலம் கட்டும் பணி முடியவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், இப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக மேம்பால பணிகள் வேகமாக நடந்து வந்தது.

அதேபோன்று வேளச்சேரி புறவழிச்சாலையில், 2012 ஜூன் 29ம் தேதிரூ.108 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பாலத்துக்கும் டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 2015 டிசம்பர் 23ம்தேதி ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்கியது. இந்த பணி ஒப்பந்தப்படி கடந்த 2018 செப்டம்பர் 22ம்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த மேம்பாலத்தில் தற்போது வரை இரண்டாம் அடுக்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல் அடுக்கு பணி தற்போது வரை நடந்து வருகிறது. இப்பணிகளையும், மேடவாக்கம் மேம்பால பணிகளையும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாம் அடுக்கினையும், கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலத்தையும் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. வேளச்சேரி இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கிறார். தொடர்ந்து வேளச்சேரியில் முதல் அடுக்கு பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் கோயம்பேடு மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Velachery ,Coimbatore ,Chief Minister ,MK Stalin , Velachery, Coimbatore, flyover, Chief Minister MK Stalin
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...