விருதுநகர்: விருதுநகரில் உள்ள பட்டாசு கடையில் சரவெடி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்த திடீர் சோதனையில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகையன்று பேரியம் உப்பு கலந்த சரவெடிகள் வெடிக்க உச்சநீதிமன்றத்தில் தடை விதித்தது.