×

தமிழகத்தில் வருகின்ற நவ.3, நவ.4ல் தீபாவளியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வருகின்ற நவ.3, நவ.4ல் தீபாவளியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வருகிற நவ.3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற நவ.4ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் வருகிற 2ந்தேதி வரை 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதன்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.3, நவ.4ல் தீபாவளியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyagumari ,Nella ,Dututututakam ,Diwali ,No.3 ,Tamil Nadu , Tamil Nadu, heavy rain, chance
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது