×

தீபாவளி பண்டிகையன்று இறைச்சி கடைகள் திறக்கலாம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்த ஆண்டு வரும் 4ம்தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று, இறைச்சிக் கடைகள் மூடப்படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  அதேவேளையில் ஜெயின் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deepavali , Deepavali Festival, Meat Shop, Government
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!