×

விபத்தில்லாத தீபாவளி மநீம வலியுறுத்தல்

சென்னை:  மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு மநீம ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறது. தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டம் 84ன்படி உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. இந்த ஆண்டில் இருந்தாவது இதுபோன்ற விதிமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். தீ விபத்து இல்லாத தீபாவளி கொண்டாட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags : Deepavali Manima , Accident-free, Diwali, Manima, insistence
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...