×

இந்தியாவில் புதிதாக 14,313 பேர் கொரோனாவால் பாதிப்பு: 549 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.57 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.42 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 14,313 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,60,470ஆக உயர்ந்தது.
* புதிதாக 549 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,740 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,543 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,555  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 1,05,43,13,977 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 56,91,175 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags : India , corona
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...