×

அதிகார வரம்பை ஆளுநர் மீறக்கூடாது: திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை: திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்களை தாண்டி செயல்படுவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. ஆளுநர்கள் அதிகார வரம்பை மீறக்கூடாது. இந்தியாவில் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜவுக்கு ஒத்து வராத மாநில அரசுகளை, ஆளுநர்களை பயன்படுத்தி கலைப்பது, மிரட்டும் செயல் சட்டத்துக்கு புறம்பானது என்றார்.

Tags : Governor , Governor should not exceed jurisdiction: Thirunavukarasar interview
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...