×

நாளை முத்துராமலிங்கத் தேவரின் 59வது குருபூஜை!: பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சசிகலா மலர்தூவி மரியாதை..!!

ராமநாதபுரம்: தென்மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஒருவார அரசியல் சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கிய சசிகலா, காலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் சென்றார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய வாகனத்தில் மதுரை வந்த சசிகலாவை அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் சென்ற சசிகலா, அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கதேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சசிகலாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சசிகலா பயணம் செய்யும் வாகனத்துக்கான அனுமதியை காவல்துறையிடம் இருந்து பெற்றிருந்தார். அதிமுகவை மீட்கப்போவதாக சூளுரையுடன் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள சசிகலா, மொத்தம் 25 இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார்.


Tags : God ,Sasikla Malartuvi ,Blonghon ,
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்