×

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் தனியாருக்கு விற்கப்படுவது கிடையாது.. அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை : இஸ்ரேல் தூதர் விளக்கம்!!

இஸ்ரேல் : பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் தனியாருக்கு விற்கப்படுவது கிடையாது என்றும் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுவதாகவும் இஸ்ரேல் நாட்டின் இந்தியாவுக்கான தூதர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நார் கிலோன், பெகாசஸ் மென்பொருள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெகாசஸ் மென் பொருளை தயாரிக்கும் என்எஸ்ஒ என்ற இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் அரசின் அனுமதியை பெறுவதாக கூறினார். அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்யும் பொருட்களை அரசாங்கங்களுக்கு விற்பதாக இருந்தால் மட்டுமே தாங்கள் அனுமதிப்பதாகவும் இஸ்ரேல் நாட்டின் அனுமதி இன்றி தனியாருக்கு என்எஸ்ஓ நிறுவனம் விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். பெகாசஸ்  விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு தொடர்பாக நிபுணர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மற்றும் அது குறித்து கருத்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார். இஸ்ரேல் தூதர் நார் கிலோனின் கருத்து ஒன்றிய அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. 


Tags : பெகாசஸ்
× RELATED மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி...