டெல்லி: சிகிச்சைக்கு முன் ஜெயலலிதா எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என விவாதிக்க தேவையில்லை, எப்படி சிகிச்சை அளித்தோம் என்றுதான் பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தகுதியில்லை என அப்போலோ குற்றம்சாட்டியுள்ளது.