டெல்லி: பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரி யார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இந்திய ஜனநாயனத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. செல்போன் ஒட்டுக்கேட்பு தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து தாங்கள் கூறிய புகாருக்கு உச்சநீதிமன்ற உத்தரவு வலு சேர்த்துள்ளது என பேட்டியளித்தார்.