×

ஓபிஎஸ் நிதானமாக பேசுவார்...சசிகலா பற்றி சரியான கருத்தையே கூறி இருக்கிறார் : டிடிவி தினகரன் சப்போர்ட்

தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் சசிகலா குறித்து சரியான கருத்தையே கூறி இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு தஞ்சாவூரில் அவர்களின் திருவுருவ படத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை மீட்பதே தங்கள் நோக்கம் என்றும் அதற்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

சசிகலாவிற்கு ஆதரவாக ஓ பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தினகரன், எப்போதும் நிதானமாக பேசக் கூடிய ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறி இருப்பதாக குறிப்பிட்டார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சூரியனை பார்த்து என குறிப்பிட்டு சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்தில், அதிமுகவில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : OBS ,Sasikala ,DTV Dinakaran , டிடிவி தினகரன்
× RELATED சொல்லிட்டாங்க…