×

சென்னையில் தடையை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ஒரே நாளில் 1.60 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் தடையை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ஒரே நாளில் 1.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு பெருநகர மாநகராட்சி ஏற்கனவே தடை விதித்துள்ளது. தடையை மீறி குப்பை கொட்டுவோாரிடம் இருந்து மண்டல அதிகாரிகள் அபராதத்தை வசூலித்து வருகின்றனர். சென்னையில் தடையை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.26 லட்சத்து 38,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , In Erode, SKM , Cattle Feed Company, Testing
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...