×

ஆத்தூர் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு?

சேலம்: ஆத்தூர் சிறையில் இருந்த கைதி கார்த்தி மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். வலிப்பு, மாரடைப்பு காரணமாக கைதி கார்த்தி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இறந்ததாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான கார்த்தி லாட்டரி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் கைதி கார்த்தி இறந்ததால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Tags : Attur jail , Attur Jail, Prisoner
× RELATED ஆத்தூர் சிறையில் நூதன முறையில் கயிறு...