×

''திட்டங்களின் நிலை:ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராகுக', 'ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள்': தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை : அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயின்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும் என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீபாவளி இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்கவும், துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்குவதாக இருந்தால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Governor ,Secretary-General , தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...