×

காளையார்கோவில் ஊராட்சியில் பிடிஓவை தாக்கிய பாஜ துணைத்தலைவர்

காளையார்கோவில்: காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஒன்றிய துணைத் தலைவர் தாக்கியதை கண்டித்து ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றியக் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக நேற்று ஒன்றியத் தலைவர் அறையில் தலைவர் ராஜேஸ்வரி (அதிமுக), துணைத்தலைவர் ராஜா (பாஜ), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)  சத்யன்  ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை துணைத்தலைவர் ராஜா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து நேற்று ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் மனு கொடுத்தனர்.


Tags : BJP ,vice ,president ,PDO ,Kaliningrad , Bjp
× RELATED ஒடிசா மாநில பாஜக து.தலைவர் ராஜினாமா