×

உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டிருப்பதாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது: விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அனைவரும், கஷ்டப்பட்டு வளர்த்த நமது கட்சியை, இன்றைக்கு யாரோ ஒரு சிலர் மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும், ஆசைவார்த்தைகளை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பியும் கட்சியை விட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகமாக கருதுகிறேன். மேலும் மாற்று அணியினர் கூறும் ஆசைவார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் நீங்கள் செல்லும் போது, அது உங்களை பலவீனமானவர்களாக இருப்பதை காட்டுவதாகவும், இதை எண்ணும் போது ‘‘இக்கறைக்கு அக்கறை பச்சை” என்பதை உணரும் நாள் வரும்.

எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கட்சி நிச்சயம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். நமது கட்சி வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கட்சியின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும், மூளைச்சலவை செய்பவர்கள், ஆசைவார்த்தை பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டிப்பதோடு, அடையாளம் கண்டு, தலைமை கழகத்திற்கு தெரிவியுங்கள். இனிவரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி நமது கட்சியை வலிமை மிக்கதாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொண்டு செல்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Temujin ,Vijaykanth , No one can destroy Temujin as he is in poor health: Vijaykanth sensational report
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...