×

ஒன்றிய அரசு டாடா சன்ஸ் இடையே ஏர் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 18,000 கோடிக்கு டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு விற்றது. இதில் 2,700 கோடியை அரசுக்கு கொடுப்பதாகவும் மீதமுள்ள 15,300 கோடி ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைப்பதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்தது.  இந்நிலையில், ``ஒன்றிய அரசு, டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு இடையே கொள்முதல் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது,’’ என்று முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர் துகின் கந்தா பாண்டே தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

Tags : Government of India ,Air India ,Tata Sons , Government of India, Tata, Air India
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...