×

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,358 பேர் டிஸ்சார்ஜ்: 15 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 1,127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,95,216ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, இன்று சென்னையில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டுவில் 96 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 46 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Health Department , 1,127 people confirmed to have corona infection in Tamil Nadu today, 1,358 discharged: 15 killed: Health Department report.!
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...