சென்னை: சமூகநீதி கண்காணிப்புக் குழுவிற்கு தலைவராக சுப.வீரபாண்டியன் மற்றும் 6 உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும். சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
Tags : Social Justice Monitoring Committee ,Chief Minister ,MK Stalin , Social Justice, Monitoring Committee, Chairman, MK Stalin