×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என கணிப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளையும் கனமழை தொடரும். 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu , Heavy rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...