×

சற்று நேரத்தில் இந்திய கடலோர காவல் படையினரிடம் மீனவர் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது

புதுக்கோட்டை: இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடல் இலங்கையில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் 3 மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரு மீனவர் ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உறவினர்கள் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மட்டுமின்றி 5 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் கடந்த 3 தினங்களாக கோட்டைப்பட்டினம் கடைவீதி பகுதியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலை கட்டித்தும் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதும் மீனவர்களை கொலை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் உயிரிழந்த ராஜ்கிரணின் உடலை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும். கைது செய்யப்பட்ட 2 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று இலங்கை கடற்படை உயிரிழந்த ராஜ்கிரணின் உடலை இந்திய தூதரக அதிகாரிகள் பார்த்த பிறகு மீனவரின் உடலானது தாயகம் நோக்கி வந்துகொண்டுள்ளது. சற்று நேரத்தில் இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல் படையினரிடம் ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்க உள்ளனர்.

அதன் பிறகு புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்களும், 2 அதிகாரிகளும் 2 விசைப்படகுகளில் சென்றுள்ளனர். அவர்களிடம் சர்வதேச எல்லையில் இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் உடலை பெற்று மீனவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். அதன்பிறகு கோட்டைப்பட்டினம் மீன்படி துறைமுகத்திற்கு உயிரிழந்த ராஜ்கிரணின் உடலை கொண்டுவர உள்ளனர். இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் மீனவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை கடற்படை இதுபோன்ற அத்துமீறல்களில் தொடர்ந்து செய்து வருவதாகவும் உடனடியாக இதனை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நேற்று தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். கடலில் மூழ்கிய விசைப்படகிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Fisherman ,Rajkiran ,Indian Coast Police Force , Fisherman, Rajkiran
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...