×

திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளது. காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி நேற்று மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம், கலவரத்தை தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Karaikal ,Dwalladu , 144 Prohibition Order
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...