திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், 40க்கும் ேமற்பட்டோர் பலியானார்கள். 3 வருடங்களுக்கு பிறகு மிக பெரிதான இடுக்கி அணை திறக்கப்பட்டது. பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டன. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், 9 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.