×

அறநிலைய துறைக்கு சொந்தமான 5 கோடி சொத்து மீட்பு

சென்னை: சென்னை செங்கழுநீர் பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான 3,689 சதுரடி பரப்பளவு மற்றும் 606 சதுரடி பரப்பளவு உள்ள 2 கட்டிடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு,  அறநிலையத்துறை  சென்னை இணை ஆணையர் உத்தரவின் பேரில் மேற்கண்ட 2 கட்டிடங்களை பூட்டி இலாகா முத்திரையிடப்பட்டது. இதன் மதிப்பு 5 கோடி. சென்னை மண்டல உதவி ஆணையர் கவெனிதா, கோயில் செயல் அலுவலர் பாஸ்கரன், காவல் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Tags : Trust Department , 5 crore property owned by the Trust Department recovered
× RELATED தேவதானம் ரங்கநாதர் ஆலயத்தை...