சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: - தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,392- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 29 ஆயிரத்து 573- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,531- ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 92 ஆயிரத்து 949- ஆக உயர்ந்துள்ளது.