தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவராக விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் சிறையில் இருக்கும் அவர் துணை தலைவரானார். ஊராட்சி மன்ற உறுப்பினராக நேற்று பதவியேற்ற விஜயலட்சுமி சிறிது நேரத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.