×

வேலை இல்லாத விரக்தி 2 தொழிலாளிகள் தற்கொலை

ஆவடி: திருமுல்லைவாயல், அனுகிரகம் நகர், 5வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (33).இவர் கார் டிரைவர். இவரது மனைவி நதியா (29). இவர் ஐ.டி ஊழியர். தம்பதிக்கு, ஒரு குழந்தை உள்ளது. சமீபகாலமாக சந்திரசேகருக்கு சரிவர வேலை கிடையாது. இதனால், அவர் விரக்தியில் இருந்துள்ளார். அவரை மனைவி நதியா சமாதானம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபின்  அவர் மாடியில் உள்ள படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த நதியா கதறி அழுதார். தகவல் அறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆவடி அடுத்த வீராபுரம், கன்னியம்மன் நகர், 7வது தெரு சார்ந்தவர் ஏழுமலை (43). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இதற்கிடையில், ஏழுமலை மது பழக்கத்திற்கு அடிமையானவர். மேலும், அவருக்கு சரிவர வேலை இல்லாமலும், உடல்நலக்குறைவாலும் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஏழுமலை வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் இருந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Unemployment frustration 2 workers commit suicide
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை