×

கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் மரண வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு..!!

சேலம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த வழக்கை சேலம் போலீசார் மீண்டும் விசாரிக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் அடுத்த 5 தினங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது சகோதரர் தனபால் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை குறித்து மேல்விசாரணை நடத்தும் தனிப்படை போலீசார் கனகராஜ் மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடைய கனகராஜ் மரணம் குறித்த வழக்கை விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஆத்தூர் காவல்நிலைய போலீசாரும் மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Jayalalitha , Kodanadu, Car Driving, Salem District S.P.
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு