×

கோவை வந்த விமானம் கனமழையால் பெங்களூரு சென்றது

கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் பயணிகள் விமானம் வந்தது. கோவை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மோசமான வானிலையால், விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்காமல் பெங்களூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மழையின் காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதால் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சில நாட்களுக்கு முன் இதேபோல் சென்னை, பெங்களூருவில் இருந்து கோவை வந்த விமானங்கள் கனமழை காரணமாக தரையிறங்காமல் திரும்பி சென்றது குறிப்பிடதக்கது.


Tags : Coimbatore ,Bangalore , The flight from Coimbatore went to Bangalore due to heavy rain
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு